கடலூர், ஜூலை 26-
கடலூர் மாநகராட்சியில் தூய்மை பணி யாளர்களுக்கு வாரம் ஒரு நாள் முழு விடுப்பு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டதை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தூய்மை பணியாளர்கள் சம்பளத்தில் சிக்கன சேமிப்பு கூட்டுறவு சங்கத்திற்கு பிடித்தம் செய்து கட்டாமல் வைத்திருக்கும் ரூ.2.31 கோடி தொகை உடனடியாக மாநகராட்சி கட்ட வேண்டும். மாநகராட்சியில் 20 ஆண்டுகள் பணி முடித்துள்ள தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். 23 மாத அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி தொழிலாளர் சங்கத் தலைவர் அரசகுமரன் தலைமை தாங்கி னார். செயலாளர் செல்வராஜ், துணைத் தலைவர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனத் தலைவர் சிவராமன், ஆலோசகர்கள் பக்கிரி, கிருஷ்ணமூர்த்தி, துணை நிறுவனர் சி.பக்கிரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தி னார். அப்போது தொழிலாளர்களின் கோரிக் கைகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.