districts

சென்னை குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது

ஊத்துக்கோட்டை,மே 11-  

   சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக  பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.  

   வியாழனன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 8 டி.எம்.சிக்கு கீழ் குறைந்து காணப்ப டுகிறது. ஏரிகளில் மொத்தம் 7,310 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா தண்ணீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 2,450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு 310 கனஅடியாக வருகிறது. ஏற்கனவே பூண்டி  ஏரியில் உள்ள தண்ணீர் புழல் ஏரிக்கு அனுப்பப்படுகிறது. எனவே பூண்டி ஏரியில் கூடுதலாக கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்க முடியும். மேலும் கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் தண்ணீரை அனுப்பி சேமித்து வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ள னர். ஏற்கனவே புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போது மான தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.