districts

img

சென்னையில் ஏ.சி.பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

சென்னை,ஏப்.1- சென்னையில் நாளுக்கு நாள் வெப்பம் அதி கரிப்பதால் ஏ.சி. பேருந்து களின் பயன்பாடு அதி கரித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடு கள் முழுமையாக விலக்கப் பட்டதாலும் கோடை வெப்பம் அதிகரித்து வரு வதாலும் குளிர்சாதன பஸ்களை மக்கள் அதி கம் நாடுகிறார்கள்.  பிராட்வே- வண்டலூர் (21.ஜி), கோயம்பேடு பேருந்து நிலை யம் - கேளம்பாக்கம்(570), பிராட்வே - கேளம்பாக்கம் (102), திருவான்மியூர்-தாம்பரம் (91) வழித்தடங்க ளில் ஏ.சி.பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர் சாலை, ரேடியல் சாலை வழியாக ஏ.சி.பேருந்துகள் பெரும்பாலும் ஓடுகின்றன. தற்போது ஏ.சி.பேருந்து களில் பயணம் செய்ய கூட்டம் அதிகரித்து வரு கிறது. அடிக்கிற வெயிலை தாங்க முடியாமல் ஏ.சி.பேருந்துகளிலும், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் 48 ஏ.சி.பேருந்துகள் இயக்கப் படுகின்றன இவை பெரும்பாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குறைவாக இயக்கப்படும். ஆனால் தற்போது கூட்டம் அதிகரித்து வருவதால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களிலும் முழு அளவில் ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏ.சி. பேருந்துகளில் குறைந்த பட்ச கட்டணம் ரூ.15 ஆகவும் அதிகபட்சமாக ரூ.80 ஆகவும் உள்ளன. வெயிலின் தாக்கத் தால் பணத்தை பொருட்  படுத்தாமல் சிறிதும் நேரம் இதமாக பயணம் செய்ய குளிர்சாத வசதியை பொது மக்கள் நாடுகின்றனர்.