சென்னை,நவ.1- சென்னையில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப் பட்டது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். மழை பாதிப்பு குறித்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற 420 இடங்களில் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. சென்னை யில் இரவு முழுவதும் 19,000 பேர் பணியில் ஈடுபட்டனர். நீர் தேங்கியிருக்கும் பகுதிகள் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு மழைநீர் தேங்கிய இடங்களில் தற் போது மழை நீர் தேங்கவில்லை. சென்னை யில் தாழ்வான இடங்களில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டது. புதிய இடங்களில் தண்ணீர் தேங்குவதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, மக்களுக்கு தேவையான அடிப்படை தேவையை நிறைவேற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி இணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படு கிறது என்று கூறினார். செய்தியாளர்க ளுடனான இந்த சந்திப்பின் போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.