ருஷ்ணகிரி,ஜூன் 16-
குறவர் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரை விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்த சித்தூர் காவல்துறையின் பிடியிலிருந்து 5 பேரை தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம், குறவர் இன முன்னேற்ற சங்கத்தின் தலையீட்டால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், புளி யாண்டபட்டி கிராமத்திற்கு ஞாயிற்றுக் கிழமை (ஜூன் 11) இரவு காவலர் உடை அணியாமல் வந்த ஆந்திரா மாநிலம் சித்தூர் துறையினர், குற வர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஐயப்பன் மீது வழக்கு ஒன்று உள்ளது அவரது மனைவி அருணா (32), 60 வயதான தாயார் கண்ணம்மாள், ஏழு வயது மகன் ஸ்ரீதர், 30 வயதாகும் சகோதரி சத்தியா, அவரது கணவர் ரமேஷ், மருமகள் பூமதி ஆகிய ஏழு பேரையும் காட்டுமிராண்டித்தனமாக
பெண்கள், குழந்தை என்றும் பாரா மல் ஒட்டுமொத்தமக காவல்துறையின் வாகனத்திலேயே இரவோடு இரவாக ஆந்திரா மாநிலம் சித்தூருக்கு கொண்டு சென்று சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர்.
அடுத்த நாள் (ஜூன் 12) காலையில் இந்த தகவலை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்திற்கு ஐய்யப்பனின் தம்பி ஆன்லைன் மூலமாக புகார் செய்திருக் கிறார். அதனைத் தொடர்ந்து நேரில் சென்றும் புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த புகார் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையினர் சித்தூர் மாவட்ட காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, ஆத்திரமடைந்த சித்தூர் காவல்துறை யினர், எங்கள் மீதே புகார் செய்து விட்டீர்களா? என்று ஐயப்பனின் சகோதரி, அவரது கணவர், மருமகள் பூமதியை அடித்து கொடுமையாக ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று அடைத்து வைத்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த தகவல் தமிழ்நாடு குறவர் பழங்குடி மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி வேலுவுக்கு தெரிந்ததும் சித்தூர் காவல் நிலையத்திற்கு சென்று காவல் ஆய்வாளரை சந்தித்துள்ளனார். அப்போது, முறையான பதில் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, தலையீட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும், ஊத்தங்கரை டிஎஸ்பி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு சென்றார். பிறகு, சித்தூரில் அடைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தார்.
சித்தூர் குற்றப்பிரிவு காவலர்கள் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டி ருந்த குறவரின மக்களை மீட்டெடுக்க தமிழ் நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொருளாளர் வி.வேலு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ், வழக்கறிஞர்கள் முரளி, நவீன, அகில இந்திய ஆதி வாசிகள் உரிமைகளுக்கான தேசிய மேடையின் துணைத் தலைவர் திருப்பதி ராவ், சித்தூர் மாவட்ட சிபிஎம் தலைவர் சுரேந்திரன், சித்தூர் மாவட்ட காவல் துறை உயர் அதி காரிகளிடம் கடந்து நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, 5 பேரை வெள்ளியன்று (ஜூன் 16) விடுவித்தனர். பிறகு, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.