சென்னை, ஜூன் 2-
சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு வியாழனன்று செல்போன் அழைப்பு வந்தது. போனில் அவசரமாக மருத்துவ செலவுக்கு பணம் தேவைப்படுவதாகவும், உடனடியாக ரூ. 50 ஆயிரம் பணம் அனுப்பமுடியுமா? என்றும் கேட்டுள்ளார்.
இதை உண்மை என்று நம்பிய மாணவி ஆண் நண்பர் கூறிய எண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார். பின்னர் இது தொடர்பாக தனது நண்பரை தொடர்பு கொண்டு மாணவி கேட்ட போதுதான் மோசடி நபர் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.