districts

img

செங்கொடி ஏற்றினால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்: மலைவாழ் மக்கள்

கள்ளக்குறிச்சி, அக்.29 கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ஆரம் பூண்டி பஞ்சாயத்து தொட்டித்துறைகாடு கிராமத்தில் தமிழ்நாடு மலைவாழ் சங்கத்தின் கொடியேற்று விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சங்கத்தின் மூத்த தலைவர் என்.கிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.ஏழுமலை, கல்வராயன் மலை ஒன்றிய செயலாளர் வி.அண்ணாமலை, மலைவாழ் மக்கள் ஒன்றிய செயலாளர் ஏ. செல்வராஜ், நிர்வாகிகள் சடையாண்டி, தங்கராசு, லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மலைவாழ் மக்கள் வாழ்விடங்களில் தார்ச்சாலை வசதி இல்லாததால் நோயாளி கள் மருத்துவமனைக்கு செல்வதில் கால தாமதம் ஆகிறது. சுமார் 7 கிமீ தூரம் கரடு முரடான பாதையை  கடந்த செல்ல வேண்டியுள்ளதால் ஏராளமான உயிரி ழப்புகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் நோயாளி கள், கர்ப்பிணிகள், பாம்புக்கடிக்கு ஆளா னோர் என 40 க்கும் மேற்பட்டவர்கள்  உரிய நேரத்திற்கு சிகிச்சைக்கு செல்ல முடி யாமல் உயிரிழந்துள்ளனர். கர்ப்பிணி பெண்களுக்கு சில சமயம் வழியிலேயே பிரசவமும் நடந்துள்ளது. இந்த அவல நிலை எப்போது மாறும் என்று மலைவாழ் கிராம மக்கள் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். செங்கொடி ஏற்றினால் எங்கள் கிராமத்திற்கு தீர்வுகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கொடியேற்று விழாவில் கொட்டியந்துறைகாடு கிளைத் தலைவர் விஜயகாந்த், சக்திவேல், இளையராஜா உள்ளிட்ட கிராம மக்கள்  ஏராளமானோர் பங்கேற்றனர்.