ராணிப்பேட்டை, ஜூன் 27 –
ஆற்காடு வட்டம் சக்கரமல்லூர் கிராமம் பாலாற்றில் மணல் எடுக்க மணல் குவாரி அமைக்க வேண்டாம் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சக்கரமல்லூர் கிராம பொதுமக்கள் திங்களன்று (ஜூன். 26) கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், சக்கர மல்லூர் கிராமத்தில் சர்வே எண்.1588 இல் ஹெக்டர் 4.95.0 ஏர்ஸ் பரப்பளவில் அரசு மணல் குவாரி அமைக்க மாவட்ட ஆட்சியர் கடித எண்.119/2023, நாள் 17.05.2023 இன்படி, விளம்பரம் செய்யப்படும் ஆரம்ப தேதி, முடிவு தேதி குறிப்பிடா மல் விளம்பரம் செய்வதாக பொது மக்களிடம் ஜூன் 9 அன்று விளம்பர தாளில் கையொப்பம் பெறப்பட்டது.
சக்கரமல்லூர் கிராமத்தில் 2014 ஆம் ஆண்டு ஆற்றில் மணல் எடுக்க அரசு அனுமதித்த அளவை விட மிகவும் அதிக அளவில் ஒப்பந்த தாரர்கள் அள்ளி விட்டதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சுற்றி யுள்ள அனைத்து கிராம கிணறு களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலத்தடிநீர் மட்டம் அதல பாதா ளத்தில் போயுள்ளது. இதே நிலை நீடித்தால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பெரும் சிக்கல் ஏற்படவாய்புள்ள தாக தெரி வித்துள்ளனர்.
மேலும் ஆற்றில் மணல் குவாரி அமைத்து மணல் அள்ள அனுமதி கொடுத்தால் கிராமத்தில் உள்ள அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டு, குடும்ப அட்டை, ஓட்டுரிமை உள்ளிட்ட தனி நபர் அத்தாட்சிகளை அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்க தயாராக உள்ளதாக மனுவில் தெரி வித்துள்ளனர்.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட நிர்வாகிகள் எல்.சி.மணி, சி.ராதாகிருஷ்ணன், டி. சந்திரன், அ. குமார் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் புதனன்று (ஜூன். 28) மாலை விவசாயிகள், பொதுமக்களை திரட்டி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிராம பொது மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.