districts

img

தமிழ்ப்பற்று உண்மையென்றால் இந்தியை திணித்தது ஏன்?

சென்னை, ஏப். 8 - தமிழ் பற்று உண்மையென்றால் இந்தியை திணிப்பது ஏன்? என்று திமுக  துணைப்பொதுச் செயலாளர் கனி மொழி கருணாநிதி கேள்வி எழுப்பி னார். தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு திங்களன்று (ஏப்.8) கண்ணகி நகரில் கனிமொழி பிரச்சா ரத்தை தொடங்கினார். அப்போது பேசிய அவர் பேசுகையில், “தொகுதி மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றிய தோடு, நாடாளுமன்றத்தில் தமிழ் நாட்டின் குரலாக ஒலித்தவர்” என்றார். “தூத்துக்குடி தொகுதியில் போட்டி யிட்டு தோல்வியடைந்த தமிழச்சி சௌந்தரராஜன், 2 மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் போட்டியிட்டபோது இந்த மண்ணை  சேர்ந்த எனக்கு வாக்கு அளியுங்கள்  என்று கேட்ட தமிழிசை எதற்காக  சென்னையில் வந்து போட்டியிடுகிறார்? இந்த தேர்தலிலும் அவர் தோற்பார். ஆனால் ஆளுநராக மீண்டும் செல்ல முடியாது. ஏனென்றால் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கப் போகிறது” என்றும் அவர்  கூறினார். பிரதமர் மோடியின் திடீர் தமிழ்பாசம் “பாஜக நியமிக்கும் ஆளுநர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டத் திற்கு ஒப்புதல் தர மறுக்கிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றுதான் ஆளுநர்களை செயல்பட வைக்க வேண்டி உள்ளது” என்று குறிப்பிட்ட கனிமொழி, “தேர்தல் வந்தவுடன் பிரதமர் மோடிக்கு தமிழ் மீது பற்று  வந்துவிட்டது. 10 வருட ஆட்சியில்  தமிழ் மொழிக்கு என்ன செய்தார் மோடி?  மக்கள் பேசாத சமஸ்கிருதத்திற்கு தமிழை விட 12 மடங்கு நிதி ஒதுக்கினார்.  இந்தியை திணித்து, இம்சித்து கொண்டி ருந்தவர் இப்போது தமிழ் தெரிய வில்லை என்று கவலையாக உள்ளது என்று வடை சுடுகிறார்” என்று சாடி னார். “விவசாயக் கடன், கல்விக் கடன்களை ரத்து செய்ய நிதி இல்லை  என்றார்கள். தமிழ்நாட்டிற்கு நிதி கேட்டால் தரமறுக்கிறார்கள். வெள்ள நிவாரணம் கேட்டால் கொடுக்க மறுக் கிறார்கள். ஆனால், கார்பரேட் நிறுவனங்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் தள்ளுபடி செய்துள்ளது. வெள்ள நிவாரணம் கேட்டு நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலையை பாஜக உருவாக்கி  உள்ளது. வெள்ள நிவாரணம் தர மறுத்த  பிரதமர், தமிழ்நாட்டை சுற்றி சுற்றி வந்தாலும் நோட்டாவுக்கும் கீழ்தான் வாக்கு கிடைக்கும்” என்றும் கனிமொழி  கூறினார். “வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்று 21 ஆயிரம்  கோடி ரூபாயை பறித்துக் கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு எதிரான ஆட்சி  நடக்கிறது. பாஜக-வின் பி டீம் என்பதால் அதிமுக-வை பற்றி எதுவும் பேச வில்லை. பாஜக ஆட்சியை  அகற்றுவோம். உதயசூரியனை  உதிக்கச் செய்வோம்” என்றார். இந்தக் கூட்டத்தில் சென்னை தெற்கு  மாவட்டச் செயலாளரும், அமைச்சரு மான மா.சுப்பிரமணியன், அரவிந்த்  ரமேஷ் எம்எல்ஏ, திமுக சோழிங் கநல்லூர் பகுதிச் செயலாளர்கள் மதியழகன், ரவிச்சந்திரன், சிபிஎம் மாவட்டச்  செயலாளர் ஆர்.வேல்முரு கன் உள்ளிட்டு கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து திருவான்மி யூர், சைதாப்பேட்டை, எம்.ஜி.ஆர்.நகர்,  தி.நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.