districts

img

ஐசிஎப் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து அனைத்து ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 23-

    ஐசிஎப் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மருத்துவமனை முன்பு  வெள்ளியன்று (ஜூன் 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ஐசிஎப் இன்ஸ்டிடியூட் நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.செந்தில் முருகன் கடந்த 3ஆம் தேதி வயிற்று வலி காரணமாக ஐசிஎப்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் அலட்சியத்தாலும், கவனக்குறைவாலும், தவறான சிகிச்சை மேற்கொண்டதாலும் அவர் 14ஆம் தேதி மரணமடைந்ததாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

     தரமற்ற சிகிச்சையாலும், மருத்து வர்களின் ஆணவப் போக்காலும் சிகிச் சைக்கு வரும் தொழிலாளர்களின் நம்பிக் கையை மருத்துவமனை முற்றிலும் இழந்து நிற்கிறது. எனவே செந்தில்குமார் மரணத்திற்கு காரணமான சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிறப்பு கிளினிக்குகளில் நோயாளி களை அலைக்கழிக்காமல், கூடுதலான  மருத்துவர்களை நியமனம் செய்ய  வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்க ளுக்கு தனியாக மாத்திரை வழங்கும் கவுண்டர் அமைக்க வேண்டும். ஊழியர்க ளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். நோயாளிகளை தனியார் ஸ்கேன் சென்ட ருக்கு அனுப்புவதை தவிர்த்து, மருத்துவமனையிலேயே ஸ்கேன் சென்டர் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து சங்க தலைவர்கள் பேசினர்.

     ஏஐஆர்எப் பொதுச்செயலாளர் பி.மோகன்தாஸ் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொமுச பொதுச் செயலாளர் வ.முரளிதரன், தலைவர் ரமேஷ், சிஐடியு கவுரவ தலைவர் எஸ்.ராம லிங்கம், செயல் தலைவர் கிருஷ்ணகுமார், தலைவர் சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் பா.ராஜாராமன், என்.எப்.ஐ.ஆர். தலைவர் செந்தில்குமார், ஏஐஆர்எப் துணைத் தலைவர் டி.மனோகரன், பிஆர்எம்எஸ் பொதுச்செயலாளர் சுந்தர், தனுஷ் (ஏடிபி), மங்காராமன், சாந்தகுமார் (எஸ்.சி, எஸ்டி), பார்த்தசாரதி (ஏஐஓபிசி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.