சென்னை,ஜன.19- திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களின் படைப்பாற்றலை வெளிப் படுத்தும் நான் முதல்வன் திட்டத்தின் குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. மாநில அளவிலான இப்போட்டியில் 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் அனுமதிக்கப் படஉள்ளனர்.
குறும்படத்திற்கான தலைப்புகள்
பள்ளிக் கல்வியின் திறன் மேம்பாட்டு பயிற்சியின் முக்கியத்துவம், பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மய மாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும், தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்து வதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல், திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர் காலத்தை எவ்வாறு வடி வமைக்கிறது?, டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள், நடைமுறை திறன்பயிற்சி களின் முக்கியத்துவம் (தொழில்கல்வி) ஆகிய 6 தலைப்புகளின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அது புனைகதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்தவகையிலும் இருக்க லாம். முதல் பரிசாக ரூ50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ 25ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ10ஆயிரம் தேர்ந்தேடுக்கப்பட்ட குறும்படத்திற்கு வழங்கப்படும்.
புகைப்படப் போட்டிக்கான தலைப்பு
“தமிழகத்தில் அழிந்து வரும் பாரம்பரிய திறன்கள்”. வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்.1ஆகும். பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகை யிடுவதன் மூலம் பங்கேற்க லாம் மற்றும் socialmedia@naanmudhalvan.in என்ற மின்னஞ்சலில் சமர்ப் பிக்கலாம். இதில் வெற்றிப் பெறும் குறும்படதாரர்க ளுக்கு “நான்முதல்வன்” திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன் 3 மாத இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in இணையதள முகவரியை பார்க்கவும்.