districts

img

இல்லத் திறப்பு விழா

சென்னை ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் முன்னாள் இணைச் செயலாளர் என்.ஜெயராமன், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஜெ.தமிழ்அழகி ஆகியோர் இல்லத் திறப்பு விழா ஞாயிறன்று (டிச. 4) திருநின்றவூரை அடுத்த கொட்டாமேடு பகுதி லட்சுமிபதி நகரில் நடைபெற்றது. புதிய இல்லத்தை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து வைத்தார். இதில் ஐசிஎப்  யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் எஸ்.ராமலிங்கம், பொதுச் செயலாளர் பா.ராஜாராமன், பொருளாளர் கே.டி.ஜோஷி, முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், பூந்தமல்லி ஒன்றியச் செயலாளர் ஜெ.ராபர்ட் எபிநேசர், வாலிபர் சங்கத்தின் மாவட்ட முன்னாள் செயலாளர்கள் எஸ்.செந்தில்குமார், எஸ்.தேவேந்திரன், கவிஞர் சி.சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.