districts

img

திருவள்ளூர் மாவட்டத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி வெங்கடாதிரி மீது கொலைவெறி தாக்குதல்

திருவள்ளூர் மாவட்டத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி வெங்கடாதிரி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட அனைவர் மீதும் உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யாத பாதிரிவேடு காவல் நிலைய அதிகாரிகளை கண்டித்து மாதர்பாக்கம் பேருந்து நிலையம் அருகே பகுதி தலைவர் முனிரத்தினம் தலைமையில் ஞாயிறன்று (மே 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் எஸ்.மோசஸ்பிரபு, பகுதி செயலாளர் ப.லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்மிடிப்பூண்டி வட்டட் செயலாளர் இ.ராஜேந்திரன், விவசாயிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் பி.கருணாமூர்த்தி, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வசந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;