districts

தேர்வு நேரத்தில் வீடுகளை இடிக்க சிபிஎம் எதிர்ப்பு

சிதம்பரம், மே 13- தேர்வு நேரத்தில் வீடுகளை இடிக்கக் கூடாது என்றும், ஆட்சிக்கு களங்கம் கற்பிக் கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிதம்பரம் நகராட்சி 33ஆவது வார்டில்  உள்ள அம்பேத்கர் நகரில் வீடுகள் இடிப்பதற்காக வியாழனன்று (மே 12)  காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  சிதம்பரம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் பொக்ளின் இயந்திரங்களோடு வந்துள்ளனர். மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுவ தால் 20 நாட்கள் கழித்து வீடுகளை இடிக்கும்  பணியை துவக்க வேண்டும் என்ற கோரிக்கை யோடு, சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவ ரும், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினருமான முத்துக்குமரன் பொதுமக்களுடன் இயந்திரங்கள் முன்பு நின்று மறியல் செய்தார். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன் முத்துக்குமரனை வாயா, போயா  என்று ஒருமையில் பேசி,  உடனடி யாக காவல்துறை மக்களை அடித்து துரத்த  வேண்டும் என்று தேவையற்ற பதட்டத்தை உருவாக்கியுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர் மன்றத் துணைத் தலைவரை, கட்சியின்  நகரச் செயலாளர் ராஜா இருக்கும் போதே ஒருமையில் பேசிய, ஆட்சிக்கு களங்கம் கற்பிக்கும் திமிர் பிடித்த பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக சட்டமன்றத்தில் தமிழக  முதல்வர் அறிவித்தபடி மாற்று இடம் கொடுத்துவிட்டுதான் இப்பகுதி வீடுகளை இடிக்க வேண்டும். தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் எளிய மக்களின் குடிசைகளை இடிப்பதை நிறுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர்  மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.