திருவள்ளூர், நவ 27- வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் கொரோனா சிறப்பு நிதி கடன் திருப்பத் தொகையில் ரூ. 48 லட்சம் வரை முறைகேடு நடை பெற்றுள்ளது குறித்து உரிய விசா ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர், மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆகிய நான்கு ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றின் போது இத்திட்டம் செயல்படும் ஊராட்சிகளில் தனிநபர் தொழில் முனைவோர்கள், மாற்றுத்திறனாளி கள், நலிவுற்ற பழங்குடியினர், கண வனால் கைவிடப்பட்டோர், விதவை கள், திருநங்கைகள், இவர்களுக்கும் மற்றும் புலம்பெயர்ந்த இளை ஞர்களுக்கு தொழில் செய்ய ரூ.1 லட்சம் என 200 இளைஞர்க ளுக்கு கடன் வழங்கியுள்ளது. இதில் பழங்குடி இளை ஞர்களுக்கு ஒருவருக்கு கூடகடன் வழங்கவில்லை என கூறப் படுகிறது. தனிநபர் கடனாக தொடர் புடைய ஊராட்சியில் உள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் சுயஉதவிக் குழு, சுய உதவிக் குழு உறுப்பினரின் குடும்பத்தை சார்ந்த தொழில் முனை வோருக்கு கடன் வழங்கப்பட்டு, கடன் திருப்பம் செய்யப்பட்டு வரு கிறது. இதனை தொடர்ந்து, கடனாக வழங்கப்பட்ட தொகையை 100 விழுக்காடு கடன் திருப்பம் செய்யப்பட்ட 1000 ஊராட்சிகளில், மாநில அளவில் தமிழ்நாடு முதல மைச்சரால் ‘நுண் தொழில் நிறுவன நிதிக் கடன்’ என்ற பெயரில் கடந்த 28.06.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படும் நான்கு ஒன்றி யங்களில் உள்ள 198 ஊராட்சி களில் தற்போது வரையில் 59 ஊராட்சிகளில் மட்டுமே நுண் தொழில் நிறுவனம் நிதிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள சில ஊராட்சிகளில் கடன் பெற்ற பயனாளிகளிடமிருந்து வசூல் செய்யப்பட்ட தொகை யானது. மகளிர் திட்டத்தால் பரா மரிக்கப்பட்டு வரும் ஊராட்சி அள விலான கூட்டமைப்பின் பொது நிதி கணக்கில் இருந்து, நுண் தொழில் நிறுவனம் நிதிக் கடன் என்ற வங்கி கணக்கிற்கு கடன் திருப்பித் தொகையை செலுத்தவில்லை என்கின்றனர். இதில் சில ஊராட்சிகளில் கடன் திருப்பம் செய்யப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தாமல் மகளிர் திட்டத்தில் வட்டார அள வில் பணியாற்றும் சில பணி யாளர்கள் மற்றும் ஊராட்சி அள வில் பணியாற்றிவரும் பணியாளர்க ளிடம் கையிருப்பாகவும், சிலர் சொந்த பயன்பாட்டுக்காகவும் பயன்படுத்தியுள்ளது இத்திட்ட அதிகாரிகள் நடத்திய விசா ரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரத்தை மாவட்ட செயல் அலுவலர் ராஜேஷ் என்பவர், கூடுதல் ஆட்சியர் (ம) திட்ட இயக்கு நருக்கு இந்த நிதி முறைகேட்டின் விவரத்தினை வழங்கியுள்ளார். இது குறித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ் அரசு கூறுகையில், “வாழ்ந்து காட்டு வோம் திட்டத்தின் முறைகேடான மொத்த கடன் திருப்பத்தை உடனடி யாக வசூல் செய்து புலம்பெயர்ந்த பழங்குடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு நிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவில் உள்ள பழங்குடி பெண்களுக்கு தொழில் கடன் வழங்க வேண்டும். வறுமையை ஓரளவு குறைக்கும் இத்திட்டத்தின் மூலம் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.