districts

img

பழங்குடியினருக்கு பட்டா வழங்க மலைவாழ் மக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை, மே 13-

     வந்தவாசி தாலுக்காவில் வசிக்கும் பழங்குடியினர் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும் என மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

    வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூா், அதியங்குப்பம், கீழ்க்கொவளைவேடு, ரெட்டிகுப்பம், புன்னை, மோசவாடி உள் ளிட்ட கிராமங்களைச் சோந்த பழங்குடியின ருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கக் கோரி  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தலை மையில் வந்தவாசி வட்டாட்சியா் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாட்சி யர்  ராஜேந்திரன், காவல் துணை கண்காணிப் பாளர் கார்த்திக் ஆகியோர்,  போராட்டத் தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து மழையூர், ஜப்திகா ரணி, மோசூர் ஆகிய கிராமங்களில் உள்ள 17 பேருக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்காளை வழங்கினர்.

  மேலும் எஸ்.மோட்டூர், அதியங்குப்பம், கீழ்குவளை வேடு, ரெட்டிக்குப்பம், புண்ணை ஆகிய கிராமங்களை சேர்ந்த வர்களுக்கும்  பட்டா வாங்க வேண்டும் என  வலியுறுத்தி எம்.மாரிமத்து மனு அளித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் அய்ய னார், சிபிஎம் மாவட்ட நிர்வாகிகள் செல்வன், பெரணமல்லூர் சேகரன், வட்டாரச்  செயலாளர் அப்துல் காதர், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் அரிதாசு, பொருளாளர் சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.