districts

img

மலைவாழ் மக்களின் வீடுகளை இடித்த வட்டாட்சியர்கள் மீது நடவடிக்கை

திருவள்ளூர், ஜன 6- ஆவடி மற்றும் திருப்பத்தூர் வட்டாச்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளரிடம் மலைவாழ் மக்கள் சங்க தலைவர்கள் வலியுறுத்தினர். திருப்பத்தூர் மாவட்டம்,  திருப்பத்தூர்  வட்டத்திற்கு உட்பட்ட   ஏலகிரி மலை,  முத்தனூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக  மலையாளி  பழங்குடி இன மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மாபியா கும்பலின் துணையோடு வீடுகளை அகற்ற முயற்சித்துள்ளார். இதற்கு முத்தனூர் கிராம மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததால் அனைவரும் திரும்பிச் சென்றனர்.  அதன் பின்னர் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட  வருவாய்த் துறை அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோருக்கு புகார் செய்த போது,   முத்தனூர் கிராமத்திற்கு செல்ல நாங்கள் யாரும் வட்டாட்சியருக்கு உத்தர வும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். வட்டாட்சியர் நில  மாபியாக்களுடன் கைகோர்த்துக் கொண்டு சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது பின்னர் தான் தெரிய வந்தது. இது குறித்து வருவாய் துறை உயர் அதிகாரிகளின்தலைமையில் விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மீது  சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

விளிஞ்சியம்பாக்கம் 

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட  பாரதிதாசன் நகர், விளிஞ்சியம் பாக்கத்தில் 90 ஆண்டுகளுக்கு மேலாக வேட்டைக்காரன் பழங்குடி  இன மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தால் கொடுக்கப்பட்ட பட்டா நிலத்தில் இருக்கும் வீடுகள் மற்றும் கடை களை ஆவடி வட்டாட்சியர் விஜய குமார் 10-12-2023 அன்று எந்த அறிவிப்பும் இன்றி  ஜேசிபி இயந்திரத்தை கொண்டு இடித்துள் ளார். இதனால் அங்கு வாழும் மக்கள் நிலைகுலைந்து உள்ளனர். இதனை கண்டித்து தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து  வரும் குடியிருப்புகளை எந்த அறிவி ப்பும் இன்றி இடித்து தள்ளிய ஆவடி வட்டாட்சியர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசின்  தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வருவாய்த் துறை செயலா ளர், வருவாய் நிர்வாக ஆணையர்,   ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை செயலாளர், உள் துறை செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்து வலியுறுத்தப்பட்டது. இதில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பி.டில்லிபாபு, மாநிலச் செய லாளர் இரா.சரவணன், பொருளா ளர் ஏ.பொன்னுசாமி,  மாநில துணைத் தலைவர் ஏ.வி.சண்முகம்,  மாநில துணைச் செயலாளர் இ.கெங்காதுரை,  ஏலகிரி மலை கமிட்டி தலைவர் ஆர் மனோகர், தர்மபுரி மாவட்ட தலைவர் கே.என். மல்லையன், தமிழ்நாடு  வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் விளிஞ்சியம்பாக்கம் நிர்வாகிகள் ஏ.வேழவேந்தன், சுகுமார், டில்லி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.