districts

சென்னையில் கனமழை: வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்

சென்னை, நவ. 1- சென்னையில் பெய்த கனமழையால் புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி நகர் பகுதி யில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் எதிரில் உள்ள தெருக்களிலும், புளியந் தோப்பு டிசாஸ்டர் சாலையிலும், மண்ணடி யில் உள்ள தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. அதேபோல், மெரினா  கடற்கரை மணல்வெளி முழுவதும் மழைநீர்  குளம் போல தேங்கியது. பாரிமுனையில் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கிய தால் வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் அனைத்து பகுதிகளிலும் மழை நீரை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சென்னையில் தொடர்ச்சியாக மழை  பெய்து வரும் நிலையில் மாநகராட்சி பணியாளர்கள் 20,000 பேர் களமிறக்கப் பட்டுள்ளனர். சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 420 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது கன மழையால் 25 இடங்களில் விழுந்த மரக்கிளை கள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.