districts

img

கல்வராயன் மலையில் கனமழை சாலைகள் துண்டிப்பு: மலை மக்கள் அவதி

கல்வராயன் மலை, அக்.15- கல்வராயன் மலையில் பெய்த கனமழையால் வாய்க்கால்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் தரைப் பாலம் மூழ்கி சாலை கள் துண்டிக்கப்பட்டதால் 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிப்புக் குள்ளாகியுள்ள னர். கள்ளக்குறிச்சி மாவட் டம் கல்வராயன் மலையில் பெய்த கனமழையால் மண லாறு, வெள்ளாறு, காட்டாறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து மலைப்பகுதி முழு வதும் மின்சாரம் துண்டிக் கப்பட்டது. கனமழை காரணமாக தொரடிப்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நெல், கரும்பு, மக்காச்சோளம்,மரவள்ளி, பீன்ஸ் பயிர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப் பட்டன. மேலும், 10 மின்கம்பங் கள், 3 மோட்டார்கள் மற்றும் பம்பு செட்டுகளும் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது, 2000 பாக்குமர கன்றுகள் 800 சில்வர் மரங்கள் தண்ணீரில் மூழ்கியது. அதேபோல் நூற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அடித்து செல்லப்பட்டது. மேல்முருவம், தொராங் கூர், தாழ் தொரடிப்பட்டு, எழுத்தூர் மட்டப்பட்டு, எருக்கம்பட்டு, ஆகிய கிராமங்கள் மழை யால் அதிகமாக பாதிக்கப் பட்டுள்ளது. விவசாயிகளின் காளை மாடுகள்,குடிசைகள் அடித்து செல்லப்பட்டது. தார் சாலை போடுவதற்காக வைத்திருந்த ஜல்லிகள் இருசக்கர வாகனங்களும் அடித்து செல்லப்பட்டது. இந்த கன மழை கல்வ ராயன் மலையில் பலத்த சேதத்தை உருவாக்கி யுள்ளது. தார் சாலை கள் மற்றும் பல பாலங் கள் அடித்து செல்லப்பட்டள் ளதால் அங்குள்ள மக்க ளின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. காவல்துறையினரும் வருவாய்த் துறையினரும் அசம்பாவிதங்கள் ஏற்படா தவாறு மக்களை பாது காப்பான இடத்தில் இருக்கு மாறு அறிவுறுத்தி வரு கின்றனர். மலையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தகவ லறிந்த மாவட்ட ஆட்சி யர் ஷ்ரவன்குமார் சனிக் கிழமையன்று(அக்.15) அங்கு சென்று, பாதிக்கப் பட்ட மக்களை பாது காப்பான இடங்களில் தங்கவைத்து, அவர்க ளுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவை களை வருவாய் துறை யினர் மூலம் ஏற்பாடு செய்து வருகின்றனர்.