districts

img

சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், மே 8- வேலை உரிமையை பறிப்பதை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழி லாளர்களின் வேலை உரிமையை பறிப்பதை கண்டித்தும், லிக்கர் பெட்டி ஒன்றுக்கு 5.50 ரூபாயில் இருந்து 8 ரூபாயாக வும், பீர் பெட்டி ஒன்றுக்கு 4 ரூபாயில் இருந்து 8 ரூபாயாகவும், வெளிநாட்டு மதுபான பெட்டிக்கு 50 ரூபாயில் இருந்து 60 ரூபாயாக வும், குடோன் விட்டு குடோன் மாற்றும் போது பெட்டி ஒன்றுக்கு ரூ. 10இல் இருந்து 15 ஆக கூலி உயர்வு வழங்க வேண்டும். மனமகிழ் மன்றம், தனியார் ஏசி பார் சம்பந்தப்பட்ட லோடிங் பணிகள் பல ஆண்டு காலமாக நடைமுறையில் உள்ள படியே செயல்படுத்த வேண்டும், அந்தப் பணியில் ட்ரான்ஸ்போர்ட் காண்ட்ராக்டரை அனுமதிக்கக் கூடாது, நடைமுறையில் உள்ள எந்த பணியையும் தொழிலாளர்கள் பெற்று வரும் கூலியை குறைக்கும் நோக்கத்தோடு மாற்றம் செய்யக் கூடாது, மதுபான உற்பத்தி ஆலைகள் இறக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சுமைப்பணி தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சிப்காட்டில் உள்ள டாஸ்மாக் குடோன் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வி.சுப்பராயன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.உத்திராபதி, நிர்வாகிகள் தண்டபாணி, முருகன், பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.