districts

புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை துண்டித்து எடுத்து சென்ற மந்திரவாதிகள்

மதுராந்தகம், அக்.27-  மதுராந்தகம் அருகே சித்திரவாடி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகள் கிருத்திகா (வயது12). கடந்த 5-ந்தேதி வீட்டிற்கு வெளியே விளை யாடிக் கொண்டிருந்த போது சாலையில் இருந்த மின் கம்பம்  முறிந்து மாணவி கிருத்திகா மீது விழுந்தது.   இதில் தலையில் விழுந்து பலத்த காயம்  அடைந்த அவர் சென்னை அரசு மருத்து வமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14 -ந்தேதி இறந்தார். இதையடுத்து கடந்த 15-ந்தேதி இறுதி சடங்குகள் செய்யப்பட்டு சித்திரவாடி கிராமத்தில் உள்ள மயானத்தில் கிருத்திகாவின் உடல் புதைக்கப்பட்டது. இந்த நிலையில் புதனன்று காலை மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இடம் தோண்டப்பட்டு இருந்தது. மேலும் அந்த இடத்தில் மஞ்சள், குங்குமம், எலுமிச்சம் பழம், ஒரு டார்ச்லைட், தலைமுடி, கையுறை ஆகியவை கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கிருத்திகாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், இது தொடர்பாக சித்தாமூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இதைத்தொடர்ந்து சித்தாமூர் போலீசார் மாணவியின் புதைக்கப் பட்ட இடத்தில் தோண்டி பார்த்தபோது அவரது உடலில் இருந்த தலை  மட்டும் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் வெட்டிஎடுத்து சென்று இருந்த னர். இதையடுத்து உடல் சேதப்படுத்தப்பட்டு உள்ளதா? என்பதை கண்டறிய பரிசோத னைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் புதைக்கப்பட்ட இடத்தில் பூஜை பொருட்கள்  இருந்ததாலும் தலைச்சன் குழந்தை, சூரிய கிரகணம் என்கிற அடிப்படையில் இதனை மாந்திரீகவாதிகள் செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக சித்தாமூர் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.