districts

img

திருடுபோன செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

ராணிப்பேட்டை, ஜூன் 25 – ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 120 செல்போன்களை காவல்துறையினர் மீட்டு உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செவ்வாயன்று (ஜூன் 25)  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி தலைமையில் ஒப்படைக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது மக்கள் யாரேனும் செல்போன் தவறவிட்டால் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இணைய வழிய குற்றங்கள் தொடர்பாக உதவி எண் : 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டார். இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குணசேக ரன், குமார், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் சீராளன்,  வெங்கடக்கிருஷ்ணன்,  ஆய்வாளர்கள்  அருண்குமார் மாவட்ட தனிபிரிவு  கலையரசி மாவட்ட குற்றப்பிரிவு, காவல்  அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக கடந்த மே.14 வாலாஜா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் களவுப்போன 30  செல்போன்களை காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா   தலைமையிலான போலீசார் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.