districts

img

மாற்றுத்திறனாளிகள் கையெழுத்து இயக்கம்

இஸ்ரேலின் போர் வெறியை கண்டித்து சனிக்கிழமையன்று (ஆக.3) நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் இயக்கம் நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாற்றுத்திறனாளிகள் சென்னை சைதாப்பேட்டையில் கையெழுத்து இயக்கம் நடத்தினர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் அ.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் எம்.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.