கிருஷ்ணகிரி, அக்.8- கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம், நாட்றாம்பாளை யம் ஊராட்சி பத்தி கவுண்டனூர், செங்கொடிபுரம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்கு 1999 ஆம் ஆண்டு 29 பயனாளிகளை தேர்வு செய்தனர். மேலும், இதற்காக 1.6 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்தனர். ஆனால் 25 ஆண்டுகள் கடந்தும் 29 குடும்பங்களுக்கும் பட்டாவும் வழங்க வில்லை வீட்டுமனையும் பிரித்து தரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அதற்கான எந்த முயற்சியும் செய்யவில்லை. இது வரை நிலம் ஆதி திராவிட நலத் துறை யின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அதேபோல் அத்தி மரத்தூர், சித்தாண்டபுரம் பையில் காடு, பூஞ்சோலை, காமராஜபுரம், மிலிதிக்கி மக்கள் வசித்து வரும் வீடுக ளுக்கு பட்டா கேட்டும், பட்டியலின மக்களுக்கு இலவச வீட்டு மனை கேட்டும் 5 ஆண்டுகளாக போராடி வரு கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் அஞ்செட்டி ஒன்றிய, தலைவர் கோவிந்தசாமி, செயலாளர் குமாரவடிவேல் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டமும் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேசன் ஆகியோர் அஞ்செட்டி வருவாய் வட்டாட்சியர்,ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர்,காவல் ஆய்வாளர், வருவாய் துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, செங்கொடி புரத்தில் 1999 இல் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை 29 பயனாளிகளுக்கு உடனே அளவீடு செய்து 2 மாதத்திற்குள் பட்டா வழங்கப்படும் என்றும் அங்கு குடியிருந்து வரும் 33 பயனாளின் குடியிருப்பை அளவீடு செய்து 7 நாட்களுக்குள் பட்டா வழங்கப்படும் என்றும் உறுதியளித்தனர். மேலும், இதுவரை வீடு நிலம் இல்லாத 41 பயனாளிகளுக்கு ஊருக்கு அருகில் 2 மாதத்திற்குள் இலவச வீட்டு மனையும்,அத்தி மரத்தூரில் 25 பேருக்கு 2 மாதத்துக் கள்ளும் சித்தாண்டபுரம் 55, பூஞ்சோலை 10,காமராஜபுரம் 14, தக்கட்டி மிலிதிக்கி யில் 15 இருளர் பழங்குடி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா நேரில் ஆய்வு செய்து வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.