districts

img

உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை

விழுப்புரம், மார்ச் 23- உணவுப் பொருட்க ளுக்கான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விழுப்பு ரம் மாவட்டம் செஞ்சி இந்தி யன் வங்கி அருகே வியாழ னன்று (மார்ச்23) ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராம மூர்த்தி, மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், மனித நேய மக்கள் கட்சி யின் மாவட்டத் தலைவர் எஸ்.சையத் உஸ்மான், விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்டி. முருகன், செம்மேடு சர்க்கரை ஆலை தலை வர் டி.ஆர்.குண்டு ரெட்டி யார், திராவிடம் கழக மாவட்டச் செயலாளர் த.சே.வ.கோபண்ணா, விசிக நகரச் செயலாளர் செஞ்சி சிவா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும், உற்பத்தி செலவுக்கு மேல் 50 விழுக்காடு உயர்த்தி வழங்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.  உணவுப் பொருட்க ளுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோலிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும், பொது விநியோக திட்டத்தில் 14 வகையான அத்தியாவசிப் பொருட்களை வழங்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு களையும், மின்சார சட்ட திருத்தத்தையும் திரும்ப பெற வேண்டும். ஆளுநர் என்ற போர்வையில் சனா தனத்தை தூக்கிப் பிடித்து விஷ விதைகளை விதைக்கும் ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டில் இருந்து வெளி யேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தினர்.