காஞ்சிபுரம், ஜூன் 30 -
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கி ணைப்புச் சட்டம் 2023-ஐ திரும்ப பெற வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளி யன்று(ஜூன்30) நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலை மையில் வெள்ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச் செல்வி மோகன் ஒன்றிய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பேசினார்.
இதனைதொடர்ந்து அவர் பேசி முடித்தவுடனே அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ திரும்ப பெற வலியுறுத்தி இக்கூட்டத்தில் பங்கேற்ற 14 விவசாய சங்கங்கள் அது சம்பந்தமாக நோட்டீசை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி விட்டு முழக்கங்களை எழுப்பியவாறு கூட்டத்தை புறக்கணித்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் கே.நேரு கூறுகையில், தமிழ்நாடு அரசு போன பட்ஜெட் கூட தொடரிலே நில ஒருங்கி ணைப்பு 2023 சட்டம் கடந்த சட்டமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இது நடைமுறைக்கு வருமானால் தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்கள் விவசாயிகளை கேட்காமலே நிலங்களை கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. அதேபோல நீர்நிலைகளையும் உள்ளாட்சி நிர்வாகத்திலிருந்து நேரடியாக மாநில அரசு எடுத்துக் கொள்ளும், மேலும் இது தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்க ளுக்கு விவசாய நிலங்களை எந்த அறிவிப்பும் இல்லாமல் தாரை வார்க்கும் ஒரு மோசமான சட்டமாகும். இதற்கு மாற்றுக்கருத்து சொல்ல முடியாத அளவுக்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. விவசாயிகள் தங்கள் நிலத்தை எடுக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியாத நிலைமையுள்ளது. இந்த மோசமான சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்திருப்பது தவறானஅணுகுமுறையாகும். இந்நிலையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திலே தமிழ்நாடு விவசாயி கள் சங்கமும் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்று சேர்ந்து கூட்டத்தை புறக்கணித்து இருக்கின்றோம். ஆகவே மாநிலஅரசு உடனடியாக நில ஒருங்கி ணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டு மென்று அனைத்து விவசாயிகள் சார்பாக கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.