districts

img

கள்ளக்குறிச்சியில் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் திங்களன்று (நவ.4) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நிலப் பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா,முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் பொது நலன் குறித்து பொதுமக்களி டமிருந்து 355  மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 12 மனுக்களும் என மொத்தம் 367 பெற்றார். இம் மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.