districts

img

6 ஆண்டுகளாக திறக்கப்படாத கிராம சேவை மையம்

திருவள்ளூர், ஜன. 2 - அரசு அறிவிக்கும் திட்டங்களை தெரிந்து கொள்வதற்கும், விவசாயிகள் வேளாண் திட்டங்களை தெரிந்து கொள்வதற்கும் ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், புடலூர் ஊராட்சி கீதாஞ்சலி நகரில் 2014-2015 ஆண்டு 14.55 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கிராம சேவை மையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்களின் கால்நடைகளை கட்டி வருகின்றனர். மேலும் அங்கு குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் கட்டிடம் சிதலமடைந்து வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு அறிவிக்கும் திட்டங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராம சேவை மைய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.