காட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் பட்டமளிப்பு விழா கல்லூரிவளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.9)நடைபெற்றது. கல்லூரியின் நிறுவனரும் தமிழ்நாடு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்ஆர்கே. பன்னீர்செல்வம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி,நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர் விஸ்வநாதன், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.