வேலூர், ஜூன் 19 -
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேர்காட்டிலுள்ள திருவள்ளூவர் அரசு பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர். என்.ரவி, ஒன்றிய இணை அமைச்சர் வி.கே.சிங், தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பல்கலைக்கழக துணை வேந்தர் டி.ஆறுமுகம், பதிவாளர் விஜயராகவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் 417 முனைவர் பட்டம் உள்பட 564 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுநர் ஆர். என்.ரவி பட்டங்களை வழங்கினார். இந்த ஆண்டு மொத்தமாக 1,13,275 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்.