districts

img

சிறுமி டான்யாவின் படிப்பு செலவை அரசு ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, செப்.12- அரியவகை முகச்சி தைவு நோயால் பாதிக்கப் பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ள சிறுமி டான்யா, நான்  இனிமேல் பள்ளிக்குச் செல் வேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆவடி வீராபுரம் பகு தியை சேர்ந்த ஸ்ரீபன்ராஜ், சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது சிறுமி டான்யா,  அரியவகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டார். தமக்கு உதவிக்கரம் நீட்டு மாறு அரசுக்கு அச்சிறுமி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி யாக சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் சவிதா மருத்துவக்கல்லூரி மருத்து வமனை தானாக முன்வந்து இலவசமாக சிறுமிக்கு சிகிச்சை அளிப்பதாக தெரி வித்தது. இதனை தொடர்ந்து  பல்வேறுகட்ட மருத்துவ பரி சோதனைகள் மேற்கொள் ளப்பட்டு கடந்த 23 ஆம்  தேதி சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை நடத்தப் பட்டது. 10 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு 8 மணி  நேர தொடர் அளித்து சிறுமி யின் முகத்தை சீரமைத்தது.  நாட்டிலேயே முதல்முறை யாக 9 வயது சிறுமிக்கு மேற் கொள்ளப்பட்ட முகக் சீர மைப்பு அறுவை சிகிச்சை யாகவும் இது அமைந்தது. இதனையடுத்து முத லமைச்சர் மருத்துவ மனைக்கு சென்று சிறுமி யிடம் நலம் விசாரித்ததுடன் நம்பிக்கை அளித்தார். சிறுமி டான்யா குண மடைந்ததை அடுத்து, அவர்  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக் கிறார். அவரது படிப்பு செலவை அரசு முழு மையாக ஏற்றுக்கொள்ளும் என்று அவர் அறி வித்திருக்கிறார். முன்னதாக, பூந்த மல்லியிலுள்ள தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப் பட்டு முக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு குண மடைந்த சிறுமி டானியாவை  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,  மாவட்ட ஆட்சி யர்  ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திங்களன்று (செப். 12)  சந்தித்து நலம் விசாரித்து பூங்கொத்து கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

;