சென்னை,ஜன.12- சென்னை ஆளுநர் மாளிகையில் வியாழ னன்று (ஜன.12) பொங்கல் விழா ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் அவரது மனைவியும் கலந்துகொண்டார். இதில் தமிழ்நாடு அரசு சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. மேலும் திமுக தோழமைக் கட்சியைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ள வில்லை. அதே நேரத்தில், அதிமுக தரப்பில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு அணிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பி னர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநிலங்க ளவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். கடந்த வாரம் சென்னை ஆளுநர் மாளி கையில் காசி தமிழ்ச் சங்கமம் ஒருங்கி ணைப்பாளர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தைத் தமிழ்நாடு என்றழைக்கப்படாமல் தமிழகம் என்றே அழைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆளுநரின் இந்த பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே ஜனவரி 9 அன்று தமிழ்நாடு அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளு நர் உரையுடன் தொடங்கியது. இதில் பேசிய ஆளு நர் ஆர்.என்.ரவி, தனது உரையில் இடம் பெற்றி ருந்த தமிழ்நாடு அரசு என்ற வார்த்தைக்குப் பதிலாக இந்த அரசு எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல, தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த பல்வேறு பலதையும் வாசிக்காமலும் பெரியார், அண்ணா உள்ளிட்ட பெயர்களைத் தவிர்த்தது தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுநரின் செயலைக் கண்டித்து சட்டப்பேரவையிலிருந்து திமுக தோழமைக் கட்சிகள் வெளிநடப்பு செய்தன. ஆளுநரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், இந்த பொங்கல் விழா நடைபெற்றது. இதற்காக ஆளுநர் அலுவலகத்தில் அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு மாறாகத் தமிழக என்றும் தமிழ்நாடு அரசின் இலச்சினைக்குப் பதில் ஒன்றிய அரசின் இலச்சினையையும் அச்ச டித்தது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலை யில் ஆளுநர் ரவி நடத்திய பொங்கல் விழாவை முதலமைச்சர், அமைச்சர்கள், திமுக, காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளின் சட்டமன்ற மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் புறக்கணித்தனர். இதேபோல் பாமகவும் கலந்துகொள்ளவில்லை.