ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக் கூடிய மசோதாவிற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் திருவொற்றியூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, மாவட்ட நிர்வாகி செல்வகுமாரி, பகுதிச் செயலாளர் கஸ்தூரி, பொருளாளர் பாக்கியம் நிர்வாகிகள் விமலா, அஜிதா, விஜயா, சுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.