சிதம்பரம், ஜூன் 14-
விருதாச்சலம் வடக்கு வீதி யில் வசிக்கும் கூலித் தொழி லாளி சரோஜா (58). இவர் மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் தாங்கித் தாங்கி நடந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவர் சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மாற்று மூட்டு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே இதனைக் குணப் படுத்த முடியும் என முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கிரிதரன், இளஞ்சேரன், மயக்க மருந்து மருத்துவர் நீதி மாணிக்கம், செவிலியர் ரவீஸ்வரன் ஆகியோர் சரோஜாவுக்கு கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இதையடுத்து அவர் தற்போது வலி இல்லாமல் நடக்கிறார். இந்த சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் மேற்கொண்டால் ரூ. 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செல வாகும். முதல்வரின் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்த அறுவை சிகிச்சை இலவசமாக