districts

img

அரசு ஊழியர் சங்கம் தீவிர பிரச்சாரம்...

சிறப்பு காலமுறை ஊதியத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு  அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்  கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், வன பாதுகாவலர்கள்  உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம்  முழுவதும்  வேன் பிரச்சாரம் மற்றும் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் பூங்குழலி தலைமையில் மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி, மாநில செயலாளர்கள் உ.சுமதி, சா.கோதண்டபாணி, மாவட்ட செயலாளர் மு.முகமது உசேன், நிர்வாகிகள் பேபி, விக்டர்சுரேஷ், குணசேகரன்  உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.