புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8ஆவது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தின் சார்பில் அண்ணா சிலை எதிரே தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கவுரவத் தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் கிறிஸ்டோபர், சீதாராமன், ஆனந்த கணபதி, ஞானசேகர், நமச்சிவாயம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.