districts

சென்னை முக்கிய செய்திகள்

செய்யூரில் அரசு கலைக் கல்லூரி  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

 மதுராந்தகம், மார்ச் 31- செய்யூர் மற்றும் மதுராந்தகம் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி  அளித்தார். காஞ்சிபுரம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சனிக்கிழமையன்று (மார்ச் 30 ) மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் இளைஞரணி  செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் திறந்த  வேனில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த கூட்டத்திற்கு காஞ்சி புரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி னார். பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் திறந்த வேனில் நின்றபடி  பொதுமக்கள் மத்தியில் பேசுகையில்,  மதுராந்தகம் ஏரி 100 கோடி மதிப்பீட்டில்  தூர்வாரப்பட்டு வருகிறது, செய்யூர் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கல்லூரிகள் அமைக்கப்படும் என்றார். தடுப்பூசி உரிமத்தை  மறுத்தவர் மோடி  பாரத பிரதமர் கொரோனா காலங்களில் தமிழக மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மருந்து இல்லை என கூறிவிட்டார். தமிழகத்தில்  மழைக்காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட அவர் வர வில்லை. தடுப்பு ஊசி தயாரிக்க உரிமம்  கேட்டோம் அதையும் தரவில்லை அப்போது எல்லாம் தமிழகத்துக்கு வராத  பிரதமர் தேர்தல் வந்ததால் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகிறார். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேரடியாக சென்று ஆறுதல் கூறி உதவியவர்  தமிழக முதல்வர் ஸ்டாலின். பாதாள சாக்கடைத்திட்டம்  கடந்த பத்தாண்டு காலமாக பாஜ கவும் அதிமுகவும் கள்ள கூட்டணியில் இருந்து வந்தனர். அதிமுகவால் தான் பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் செங்கல்பட்டு மாவட்டம்,  மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில்  அனைத்து ரயிலும் நின்று செல்ல  நடவடிக்கை எடுக்கப்படும், மதுராந்த கம் நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் கொண்டு வரப்படும்  என்றார். இந்த கூட்டத்தில் மதுராந்தகம் நகர செயலாளர் குமார், நகர மன்ற  தலைவர் மலர்விழி குமார், மாவட்ட  ஊராட்சி குழுத் தலைவர் செம்பருத்தி  தூர் கேஷ், முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.அரசு, திமுக ஒன்றிய செயலாளர்கள்  கண்ணன், தம்பு, ராமச்சந்திரன், குமார், ஞானசேகர், சத்திய சாய், சிவக்குமார்,  ஏழுமலை, சிற்றரசு, பாபு,மாநில இளை ஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் யுவராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் எஸ் ராஜா மாவட்ட  குழு உறுப்பினர்கள் பி.மாசிலாமணி, எம் எஸ் அர்ஜுன் குமார், விசிக  மாவட்ட  செயலாளர் பொன்னிவளவன், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

பறக்கும் படை வாகன சோதனையில் பூந்தமல்லி அருகே சிக்கிய ரூ.2.3 கோடி

சென்னை, மார்ச் 31- பூந்தமல்லி அருகே பறக்கும் படை வாகன சோதனையில்  ரூ.2.3 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஒரே  கட்டமாக நடைபெற இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட் பட்ட கோளப்பஞ்சேரி சுங்கச் சாவடி அருகே தேர்தல் பறக்கும்  படை அதிகாரி அம்சவேணி தலைமையிலான போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2.3 கோடி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பணம் பறிமுதல் செய்து பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் தலைமையில் வட்டாட்சியர் கோவிந்தராஜ் முன்னிலையில் பணத்தை சரி பார்த்து சீல் வைத்து பூந்தமல்லி கருவூலத்தில் பலத்த  போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்கப்பட்டது.பெட்டி  முழுவதும் அடுக்கப்பட்ட ரூபாய் கட்டுகள் நிறைந்திருந்த தால் சீல் வைத்த பெட்டியை தூக்க முடியாமல் தூக்கிச் சென்று வாகனத்தில் ஏற்றினர்.

குப்பை கிடங்கு எரிந்து நாசம்

கடலூர், மார்ச் 31- கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்த ராயன்பாளையத்தில் மாநக ராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு மாநக ராட்சி பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை இந்த குப்பை கிடங்கில் திடீ ரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீயா னது வேகமாக பரவி குப்பை கிடங்கு முழுவதும் பற்றி எரிந்தது. தீயின் தாக்கம் அதிகமாக இருந்த தால் தீயை அணைக்க முடியவில்லை.