districts

img

தேசிய கல்வி சுற்றுலா செல்லும் சென்னை பள்ளி மாணவிகள்

சென்னை,அக்.31- சென்னைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் தேசிய கல்விச் சுற்றுலா செல்லும் 50 மாணவர்களை மேயர்  ஆர்.பிரியா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார்.  சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் சென்னைப் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாண வர்களை ஊக்குவிக்கவும், சென்னைப் பள்ளிகளிலேயே 11ஆம் வகுப்பைத் தொடரவும், பெருநகர சென்னை மாந கராட்சியின் சார்பில் ஆகில இந்திய அளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்க ளுக்கு அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 மாணவர்களை அழைத்துச் செல்கின்ற தேசிய சுற்றுலாத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், 2022-23ம் கல்வி யாண்டில் தேசிய கல்விச் சுற்றுலாவிற்கு 10ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சென்னைப் பள்ளிகளிலேயே 11ஆம் வகுப்பு பயிலும் 50 மாணவ, மாணவிகள் (10 மாண வர்கள், 40 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்ட னர். இந்த ஆண்டு தேசிய கல்விச் சுற்று லாவாக சண்டிகர், சிம்லா மற்றும் டெல்லி ஆகிய வட இந்தியப் பகுதிகளுக்கு மாண வர்கள் செல்கின்றனர். இந்த மாணவர்களை மாண்புமிகு மேயர் ஆர்.பிரியா திங்களன்று (அக்.31)  பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தார். இந்த மாணவர்களுக்கு  மேயர் மற்றும் துணை மேயர் சார்பில் இனிப்பு மற்றும் குளிர்பானங்கள் உள்ளிட்ட தின்பண்டங்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டது. இவர்க ளுடன் மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 5 ஆசிரியர்களும், ஒரு உதவிக் கல்வி அலுவலரும் உடன் செல்கின்றனர். மாண வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவினங்கள் சென்னை மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த மாணவர்களை  நவ.8ஆம் தேதி சென்னை திரும்புகின்றனர். இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் (கல்வி)  டி. சினேகா, கல்வி அலுவலர் சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.