districts

கஞ்சா விற்றவர்கள் கைது

சென்னை, ஆக.28 - பெரம்பூர் ரயில் நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வடமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு போதை பொருட் களை கடத்தி வரப்படுகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவலர்களின் கெடு பிடி அதிகமாக உள்ளதால் பெரம்பூர் ரயில் நிலையம் வழியாக போதைப் பொருட் களை வெளி கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பெரம்பூர் ரயில் நிலையம் 2வது நடைமேடையில் காவல்துறை யினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தான்பூரில் இருந்து பெங்களூரூ செல்லும் விரைவு வண்டி பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றது. அதில் பயணம் செய்த பாட்னாவை சேர்ந்த ராஜூ குமாரை (23) சோதனை செய்து, அவரிடமிருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அதை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். இதேபோன்று அவுராவில் இருந்து வந்த அவுரா விரைவு ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது பீகாரை சேர்ந்த அன்வர் அலாம் (28), மேற்கு வங்கத்தை சேர்ந்த ப்ரகார் (25) ஆகியோரிடமிருந்து 4 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்தனர். கொளத்தூர் ஜம்புலிங்கம் பிரதான சாலை சுடுகாட்டில் கஞ்சா விற்பனை செய்து வந்த, கொளத்தூர் ஜிகேஎம் காலனியை சேர்ந்த திவாகர்(20) என்ப வரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
வண்டலூர்
வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னல் அருகே கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு சென்று சோதனையிட்டதில் இருச்சக்கர வாகனத்தில் வைத்து கஞ்சா விற்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்து 250 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.