districts

ரயில் நிலையத்தில் கஞ்சா விற்றவர் கைது

பொன்னேரி,மே 13- மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த மீஞ்சூரை சேர்ந்த பசுபதி(28) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.