சென்னை, மே 21- சென்னை கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம், டிஜிபி அலுவலகம் எதிரில் உள்ள காந்திசிலையின் பின்புறம் சுரங்கத்தில் அமைக்கப் படுகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பணியின் போது காந்தி சிலைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தமிழக அரசு முன்னெச்சரிகை நடவடிக்கை எடுத்துள்ளது. மெட்ரோ ரயில் பணிகளால், காந்தி சிலை சேதமடைவதைத் தடுக்க, மெரினா காந்தி சிலையை இட மாற்றம் செய்து, ரிப்பன் மாளிகை யில் வைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்த நிலையில், கடற்கரையிலேயே வேறு இடத்தில் சிலையை வைக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரையின் அடையாளமாக காந்தி சிலை இருந்து வருகிறது. ரிப்பன் மாளி கைக்கு சிலையை இடமாற்றம் செய்தால், இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியாத நிலை ஏற்படும். எனவே மெரினா கடற்கரை ஒட்டி யுள்ள சர்வீஸ் சாலையிலேயே ஓர் இடம் கண்டறிந்து அங்கு சிலையை வைக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.