மகாத்மா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம் புதனன்று (அக்.2) தரமணியில், வேளச்சேரி பாலர் பூங்கா சார்பில் நடைபெற்றது. கலை நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர் டி.சுந்தர் உரையாடினார். பாலர் பூங்காவை சேர்ந்த மாணவிகள் ஆர்.நதிரா பானு, எஸ்.ஷர்மிளா நிகழ்வை வழிநடத்தினர், பூங்கா ஒருங்கிணைப்பாளர்கள் கே.வனஜகுமாரி, பி.நிலா, பி.கே.கனிமொழி, ஜி.கார்த்திக் உள்ளிட்டோர் பேசினர்.