districts

img

மார்க்சிய சித்தாந்தத்தை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்த்தவர் தோழர் லெனின் சுந்தர்

அம்பத்தூர், ஜூலை 28- மார்க்சிய சித்தாந்தத்தை தொழிலாளர்களிடம் கொண்டு சேர்த்தவர் தோழர் லெனின் சுந்தர் என அவரது இரங்கல் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். கட்சியின் வடசென்னை மாவட்ட குழு உறுப்பினரும்  சிஐடியு வடசென்னை மாவட்ட செயலாளருமான  லெனின் சுந்தர் (55) சனிக்கிழமை காலமானார். இதையொட்டி சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலை மையில் இரங்கல் கூட்டம் ஞாயிறன்று (ஜூலை 28) நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தில் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகை யில், 1987 ஆம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த வுடன் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்திலும் பின்னர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சியிலும் இணைத்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். 1990 ஆம் ஆண்டு சிம்சன் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்த அவர் அங்கு சிஐடியுவில் இணைந்த தொழிலாளர் நலன்களுக்காக, உரிமைக ளுக்காக குரல் கொடுத்தார். பின்னர் முழு நேரமும் தொழிலாளர்களுக்காகவும், மனித குல விடுதலைக்காக வும் போராட வேண்டும் எனக் கருதி பணியை துறந்து கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றத் தொடங்கினார். தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பு களை உறுதியுடன் நிறை வேற்றினார். மார்க்சிஸ்ட் மாத இதழுக்கு கட்டுரைகள் எழுதியுள்ளார். மார்க்சிய  சித்தாந்தத்தை  தொழி லாளர்களிடம் கொண்டு சேர்த்தவர் தோழர் லெனின் சுந்தர் என்று புகழாரம் சூட்டினார். அவரது இழப்பு கட்சிக்கும், தொழிற்சங்க இயக்கத்திற்கும் பேரி ழப்பாகும். அவரது மறை விற்கு மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு எப்போதும் கட்சி துணை நிற்கும் என்று ராமகிருஷ்ணன் கூறினார். மாவட்ட செயலாளர்கள் எல்.சுந்தரராஜன், ஜி.செல்வா, ஆர்.வேல்முருகன்,எஸ். கோபால், மாநிலக் குழு உறுப்பினர் எம். ராம கிருஷ்ணன், சிஐடியு மாநில துணை பொது செய லாளர் வி.குமார்,   ஏ.எஸ்.கண்ணன், (சிபிஐ), அந்தோணி (விசிக), கார்வேந்தன் (திக), பி.வி. வெங்கட்ராமன் (ஹோமியோ மருத்துவர்) ஆகி யோரும் அவரது பணி களை எடுத்துரைத்து புக ழஞ்சலி செலுத்தினர்.     முன்னதாக அவரது உடலுக்கு கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மாநிலக்  குழு உறுப்பினர்  வெ.ராஜ சேகரன், ஏ. பாக்கியம், மூத்த உறுப்பினர் க. சின்னையா, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர், மண்டலக்குழு தலைவர் பி. கே. மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் கமல், ஆதி கேசவன் (காங்கிரஸ்), பா.கருணாநிதி,  இரா.விஜயகுமார் (சிபிஐ), தாமோதரன் (மதிமுக), பேரறிவாளன் (விசிக), துளசி நாராயணன் (விவ சாயிகள் சங்கம்), சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி. கே. சண்முகம், ஆர்.ஜெயராமன், எஸ்.கே.முருகேஷ், ச.லெனின், வி. ஜானகிராமன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் கே. ரவிச்சந்திரன், எம்.கோடீஸ்வரி, இரா.தெ.முத்து, வி.கமலநாதன், பா.ஹேமாவதி, ஆர். கருணாநிதி, எஸ்.கதிர்வேல், வெ.ரவிக்குமார், பாலகிருஷ்ணன், பால சுப்பிரமணியம், கே.விஜ யன், கே.ஆறுமுக நயினார், சசிகுமார், ஏ.பி.அன்பழகன், வி. தயானந்தம், ஏ. ஆர். பாலாஜி (போக்குவரத்து), பா. ராஜாராமன் (ஐசி எப் யுனைடெட் ஒர்க்க ர்ஸ் யூனியன்), சிவக் குமார், திருமூர்த்தி (வழக்க றிஞர்கள் சங்கம்), ஆர்.இளங்கோவன், பேபி ஷகிலா (டிஆர்இயு),  கிருஷ்ணன் (வங்கி ஊழியர் சங்கம்), வி.விஜயகுமரன், எம்.அந்தோணிசாமி (அரசு ஊழியர் சங்கம்), ஜெ. பட்டாபி (செங்கொடி சங்கம்), அம்பத்தூர் நக ராட்சி ஆணையர் ரகுராமன் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். உடல் மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு இறுதியில் அவரது உடல் மருத்துவ மாண வர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக வழங்கப்பட்டது. தோழர் லெனின் சுந்தர் மறைவிற்கு சிஐடியு அகில இந்திய மையத்தின் சார்பில் ஏ. கே. பத்மநாபன், கருமலையான் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலையும், அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கும், சிஐடியு  மாநில, மாவட்ட குழு உறுப்பினர்களுக்கும் ஆறு தலையும், அனுதாபத்தை யும் தெரிவித்துள்ளனர்.