விழுப்புரம்,ஏப்.15- விழுப்புரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு ஆதரவாக திண்டி வனம், கிளியனூர் ஆகிய பகுதிகளில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் சனிக்கிழமையன்று பரப்புரை மேற்கொண்டார். கூட்ரோட்டில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி கடந்த 5 ஆண்டுகாலமாக பாஜகவின் அடிமையாக செயல்பட்டார். தற்போது அவரது பாஜக எதிர்ப்பு என்பது பம்மாத்து வேலையாகும். இதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தப்பித்தவறி மீண்டும் பா.ஜ.க, வெற்றி பெற்றால், இதுதான் நாட்டின் கடைசி தேர்தலாக இருக்கும் என அவர் தெரிவித்தார். அதிமுக, பாஜக கூட்டணிகளை தோற்கடித்து இந்தியா கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமாரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து தேர்தல் ஜன நாயகத்தை காக்கவேண்டுமென ஜி.ராம கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். இதில் திண்டிவனத்தில் வட்ட செய லாளர் டி.ராமதாசும்,கிளியனூரில் மாவட்ட குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன் ஆகியோர் தலைமை தாங்கினர், மரக்காணம் வட்ட செய லாளர் எம்.குமார், வானூர் வட்ட குழு உறுப்பினர் ஐ.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன், ஜி.ராஜேந்திரன், ஆர்.மூர்த்தி, சே.அறிவழகன், வட்ட செயலாளர் எம்.கே.முருகன், விசிக வன்னியரசு, சிபிஐ மாவட்ட பொருளாளர் இன்பஒலி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.ஐ.சகாப்தின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.