ராணிப்பேட்டை, ஆக. 18 -
விவசாயிகள் குறைதீர்க் கும் கூட்டம் வெள்ளியன்று (ஆக. 18) ராணிப்பேட்டை வருவாய் கோட்ட அலு வலர் தலைமையில் நடை பெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி. மணி, நிலவு குப்பு சாமி, பி. சேகர், ஆர். மணி கண்டன் பங்கேற்றனர்.
எல்எப்சி பள்ளி நிர்வாகத் தில் வேலை செய்யும் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த இலங்கை தமிழருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆற்காடு அடுத்த கன்னி காபுரம் கிராமத்தில் வீட்டு மனை பட்டா வழங்க வேண் டும் அந்த மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
வாலாஜா வட்டத்திற் குட்பட்ட அனந்தலை கிராமத்தில் இயங்கி வரும் கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும், உயர் மின் கோபுரங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வலியுறுத்தினர்.