சாலை வரி உயர்வை உடனடியாக ரத்து செய்யக்கோரியும் திருத்தணியில் உள்ள அனைத்து சாலை போக்குவரத்து தொழிலாளர்களுக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீடுகளை வழங்க வேண்டியும், திருவள்ளூர் மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (நவ 24), திருத்தணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நகரத் தலைவர் எம்.ஜெ.ரகுபதி தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயவேலு, நகர செயலாளர் எஸ்.பாண்டியன், ஆட்டோ சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.கரிமுல்லா, பொருளாளர் எம்.தயாளன், நகர நிர்வாகிகள் பாபு, சரவணன், இப்ராஹீம் ஆகியோர் பேசினர்.