சென்னை, பிப். 28- சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் செவ்வா யன்று (பிப்.28) நடந்த நிகழ்ச்சியில் ஏற்ற மிகு எழு திட்டங்களை தமிழக முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இதுவும் முன்னோடி திட்டமாக அமையப் போகிறது”என்றார். தூய்மைப் பணியாளர் குடும்பத்தின ருக்கு, நவீனக் கருவிகளும், வாகனங் களும் வழங்குவதுடன் திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியம் மூலமாக சென்னை மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப் படும் என்றும் அவர் கூறினார். ‘சுவர் இருந்தால் தான் சித்திரம்’ என்று சொல்வார்கள். குழந்தைகள் பிறக்கும் போதே ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும், வளரும் போதும் ஆரோக்கிய மாக வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் தான் அவர்களது எதிர்காலம் சிறப்பான தாக இருக்க முடியும். தமிழ்நாடு முழு வதும் 37 லட்சம் குழந்தைகளைப் பரிசோதனை செய்தோம். அதில் ஊட்டச்சத்து தேவைப்படுவோர் கண்ட றியப்பட்டனர். 6 மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு தரப்படும். 6 மாதம் வரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
ஏழு திட்டங்கள்
முன்னதாக முதலமைச்சர் ரூ.2 ஆயிரம் கோடியில் மருத்துவ கட்டமைப்பு கள் மற்றும் 44 புதிய மருத்துவமனை களுக்கு அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மேலூர், ஊத்தங்கரை, சோளிங்க நல்லூர் ஆகிய அரசு மருத்துவமனை களில் ரூ. 131 கோடியில் கட்டப்படவுள்ள அவசரகால கவனிப்பு பிரிவுக் கட்டிடங்கள் ஆகியவற்றுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
சிறப்பு ஊட்டச்சத்து
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களுக்கு சிறப்பு ஊட்டச்சத்து, திருநங்கை யர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திருச்சி, காஞ்சிபுரம், கடலூர், தஞ்சாவூர், கும்பகோணம், வேலூர், ஆவடி, மதுரை, சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, நாகர்கோவில், கோவை, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது
நகராட்சிகள்
மேட்டுப்பாளையம், மதுக்கரை, கோவில்பட்டி, விழுப்புரம், திருவண்ணா மலை, திருவத்திபுரம், ஆற்காடு, ஆம்பூர், வாணியம்பாடி, புதுக்கோட்டை, பெரம்பலூர், ஜெயங்கொண்டம், நாகை, மன்னார்குடி, சீர்காழி, நாமக்கல், திருச்செங்கோடு, பரமக்குடி, காரைக்குடி, நந்திவரம் கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய நகராட்சிகளில் உள்ள 433 பள்ளிகளில் பயிலும் 56,098 மாணவர்கள் இதனால் பயன்பெறுவர். பல்வேறு அரசுப் பணிகளில் தேர்வானவர்களுக்கும் மருத்துவ துறை யில் காலியாக உள்ள 4308 மருத்துவர் களின் காலிப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார். பணி நியமன ஆணை களை வழங்கிய முதலமைச்சர் மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். சென்னை மாநகரப் பகுதியில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனப்படுத்தி, தூய்மை பணி யாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினர்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைத்து மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 7 திட்டங்களை இந்த நிகழ்ச்சி யில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன், கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.