சென்னை, டிச.29 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு விழிப்புணர்வு பயிற்சியை பிரபல வேலை வாய்ப்பு ஆலோசகரும், ஆய்வாளருமான ஜெயபிரகாஷ் காந்தி யுடன் இணைந்து சவீதா பொறியியல் கல்லூரி நடத்தியது. 2 நாள் நடைபெற்ற இந்த பயிற்சியில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 110 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்களுக்கு தொழில்துறை 5.0 தொழில்நுட்பங்கள் பற்றியும், செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங், ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, இன்டர்நெட் ஆன் திங்ஸ், 3டி டிசைன் மற்றும் பிரிண்டிங், ரோபோட்டிக்ஸ், பிளாக்செயின், சைபர் செக்யூரிட்டி, செல்ப் டிரைவ் கார்கள், ட்ரோன்கள், கிளவுட் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங், எலக்ட்ரிக் வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பிசிபி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான காமராஜ் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி பேசினார். கல்லூரி முதல்வர் துரை பாண்டியன் நன்றி தெரிவித்தார்.