சென்னை,நவ.19- அரசு சாரா தொண்டு நிறுவனமான மகேஷ் நினைவு அறக்கட்டளையுடன் ஒத்துழைப்போடு குழந்தைகளுக்கான புற்றுநோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை யளிக்க நிதி திரட்ட மாரத்தான் நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இது வரும் டிசம்பர் 11 அன்று பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளியில் இருந்து நடைபெற வுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நவம்பர் 25ம் தேதி வரை www.chennairuns.com என்ற வலைதளத்தில் பதிவு செய்யலாம். 3 கிமீ, 5 கிமீ, 10 கிமீ மற்றும் 21 கிமீ என 3 வகைகளில் இந்த ஓட்டம் நடைபெறும் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ரவுண்ட் டேபிள் நிர்வாகி டாக்டர் அஸ்வின் அகர்வால் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 3 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 50,000 நபர்கள் இந்தியாவைச் சேர்ந்த வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ் வின் மூலம் திரட்டப்படும் நிதி புற்று நோய் மீதான விழிப்புணர்வை அதிகரிப் பது, சிகிச்சைக்கான செலவுகளை எதிர்கொள்வது மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கான சாத்தியமுள்ள நபர்களுக்கு தொடக்க நிலை பரிசோதனையை மேற் கொள்வது ஆகியவற்றுக்காக செலவிடப் படும் என்று நிதி திரட்டல் குழுவின் அமைப்பாளர் சிராக் குப்தா கூறினார். இந்த நிகழச்சியில் திரைக்கலைஞர் சுஹாசினி மணிரத்தினம், மகேஷ் நினைவு அறக்கட்டளை நிர்வாகி சுஜாதா சங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிர பல இசையமைப்பாளர் மகேஷ் மகாதே வன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதனு டன் 15ஆண்டுகள் போராடி 2002 அக்டோபரில் உயிரிழந்தார். அவர் நினைவாக அடை யாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிறப்பு வார்டு கட்டப்பட்டுள்ளது.