சென்னை, ஜூலை 28-
இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு அதிநவீன சிகிச்சைக்கான மையம் சென்னை அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ளது.
குளோபல் ஹெல்த் சிட்டி மருத்து வமனை அமைத்துள்ள இந்தமையத்தை தமிழ்நாடு அரசு கிடங்கு கழக தலைவர் பா.ரங்கநாதன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் குத்துவிளக்கேற்றி வைத்தார். இங்கு ரோபோடிக் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். இது மருத்துவ அறிவியல் உலகில் முன்னேறிய தொழில்நுட்பமாகும். ரோபோ உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல், பித்தப்பை மற்றும் கணைய அறுவை சிகிச்சைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை திறம்பட மேற்கொள்ளவும்
அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. இதனை மருத்துவமனையின் கல்லீரல், பித்தப்பை மற்றும் கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரஜனிகாந்த் பாட்சா தெரிவித்தார். டாக்டர் ஹார்ட் ஹெல்த்கேர் நிர்வாக இயக்குநர் குருபிரசாத் பேசுகையில், இதயம். கல்லீரல், பித்தப்பை போன்ற நோய்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், கடைசி கட்டத்தில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்ற னர். முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டால் அதற்கு முறையான சிகிச்சை பெற்று மீண்டுவர முடியும் என்றார்.